sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கணவர் 2ம் திருமணம் செய்ததால் தாயுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

/

கணவர் 2ம் திருமணம் செய்ததால் தாயுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

கணவர் 2ம் திருமணம் செய்ததால் தாயுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

கணவர் 2ம் திருமணம் செய்ததால் தாயுடன் பெண் தீக்குளிக்க முயற்சி


ADDED : அக் 20, 2024 01:17 AM

Google News

ADDED : அக் 20, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கணவர் 2ம் திருமணம் செய்ததால்

தாயுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

சேலம், அக். 20-

சேலம், பள்ளப்பட்டி, சின்னேரி வயக்காட்டை சேர்ந்தவர் தேவி, 45. அவரது மகள் இந்துமதி, 19. இருவரும் நேற்று மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்கள் மீது போலீசார் தண்ணீர் ஊற்றி தடுத்து மீட்டனர்.

பின் இந்துமதி கூறியதாவது: மல்லசமுத்திரத்தை சேர்ந்த கவின், சேலம், 5 ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பணிபுரிகிறார்.

ஜவுளி கடையில் வேலை செய்யும் போது, நானும் அவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன், 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டோம். என்னுடன் ஒன்றரை மாதமாக குடும்பம் நடத்தியவர், பின் வீட்டுக்கு வருவது கிடையாது. பேசுவதும் இல்லை.

சில நாட்களுக்கு முன் கணவர், வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரிந்தது. இதுகுறித்து கேட்டபோது என்னை அவதுாறாக பேசி

விரட்டிவிட்டார்.

இதுகுறித்து மல்ல சமுத்திரம், பள்ளப்பட்டி போலீசில் அடுத்தடுத்து புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வேறு வழியின்றி தற்கொலைக்கு முயன்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சேலம் டவுன் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us