/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாக்குதல் நடத்தி பணம் பறிக்க முயன்ற மூன்று பேர் கைது
/
தாக்குதல் நடத்தி பணம் பறிக்க முயன்ற மூன்று பேர் கைது
தாக்குதல் நடத்தி பணம் பறிக்க முயன்ற மூன்று பேர் கைது
தாக்குதல் நடத்தி பணம் பறிக்க முயன்ற மூன்று பேர் கைது
ADDED : நவ 26, 2024 01:13 AM
தாக்குதல் நடத்தி பணம் பறிக்க
முயன்ற மூன்று பேர் கைது
சேலம், நவ. 26-
திருநெல்வேலி மாவட்டம், வேலத்துறையை சேர்ந்தவர் மாரியப்பன், 24. இவர், சேலம் டவுன் பகுதியில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் விற்பனையாளராக பணிபுரிகிறார். கடந்த, 23 இரவு நண்பர் கிேஷாரின் பிறந்தநாளை முன்னிட்டு,
மற்றொரு நண்பர் முத்துக்குமாருடன் கொண்டாடி விட்டு, கிச்சிப்பாளையம் கருவாட்டுப்பாலம் பகுதியில் இவர் தனியாக வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்து மூவர், அவரை வழிமறித்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் தகராறு ஏற்பட்டு கடுமையாக தாக்கினர். மாரியப்பன் படுகாயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, செவ்வாய்பேட்டையை சேர்ந்த ரோசன், 21, கஸ்துாரிபாய் தெருவை சேர்ந்த கோகுல் சர்மா, 22, முள்ளுவாடி கேட்டை சேர்ந்த ஹரிஹரன், 20, ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று முன்தினம் மூவரையும் கைது செய்தனர்.

