/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செம்மண் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல்
/
செம்மண் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : ஜன 30, 2026 05:04 AM
இடைப்பாடி: இடைப்பாடி தாலுகாவில், செம்மண் அள்ளிய டிப்பர் லாரியை கனிமவளத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இடைப்பாடி தாலுகாவில் உள்ள பக்கநாடு, ஆடையூர் பகுதி-களில் ஏராளமான செம்மண் உள்ளது. இங்கிருந்து கள்ளத்தனமாக செம்மண் அள்ளப்படுவதாக, சேலம் மாவட்ட கனிமவளத் துறை-யினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு இடைப்பாடி தாலுகா, பக்கநாடு பகுதியில் கனிமவளத்-துறை தாசில்தார் ராஜ்குமார் ஆய்வு செய்தார்.அப்போது, 3 யூனிட் செம்மண்ணுடன் சென்ற டிப்பர் லாரியை பறிமுதல் செய்தார். இது குறித்து தாசில்தார் ராஜ்குமார் கொடுத்த புகாரையடுத்து, பூலாம்பட்டி போலீசார், டிப்பர் லாரியை பறி-முதல் செய்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

