/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செம்மண்ணுடன் டிப்பர் லாரி பறிமுதல்
/
செம்மண்ணுடன் டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : ஆக 13, 2025 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நங்கவள்ளி: நங்கவள்ளி போலீசார் நேற்று, வனவாசி - தெற்கத்தியானுார் சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது வந்த டிப்பர் லாரியை நிறுத்தும்படி, 'சைகை' காட்டியபோது, அதன் டிரைவர், சற்று முன்னதாக நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார். லாரியில், 3 யுனிட் செம்மண் இருந்தது. லாரியுடன் பறிமுதல் செய்து போலீசார் விசாரித்ததில், தப்பி ஓடியது, பெரிய சோரகையை சேர்ந்த துரைராஜ் என தெரிந்தது. அவரை, போலீசார் தேடுகின்றனர்.