/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழையை ரசித்தபடி சுற்றுலா பயணியர் குதுாகலம்
/
மழையை ரசித்தபடி சுற்றுலா பயணியர் குதுாகலம்
ADDED : ஜூலை 20, 2025 05:43 AM
ஏற்காடு: ஏற்காட்டில் நேற்று காலை முதல், வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு, பலத்த காற்று, இடி, மின்-னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது. இரவு, 7:00 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனிடையே மாலை, 5:40 மணிக்கு ஏற்-காடு முழுதும் பனிமூட்டம் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் ஊர்ந்தபடி சென்றனர்.
அதேநேரம் சுற்றுலா பயணியர் அதிக அளவில் குவிந்திருந்-தனர். அவர்கள் மழையில் நனைந்தபடி ஏற்காட்டை சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் மழையால், 'குளு-குளு' என, ஏற்காடு மாறியதால், சுற்றுலா பயணியர் குதுாகலம் அடைந்தனர். பின், 7:35 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கி, ஒரு மணி நேரம் பெய்தது.ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதி
களில் மாலை, 6:30 மணிக்கு இடியுடன் கனமழை பெய்தது. நர-சிங்க
புரம், கொத்தாம்பாடி, பைத்துார் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பரவலாக மழை பெய்து, குளிர்ந்த சூழல் நிலவியது. வாழப்பாடி, மேட்டுப்பட்டி, கருமந்துறை, ஏத்தாப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மாலை, 5:30 மணிக்கு கன-மழை பெய்தது. பனமரத்துப்பட்டியில் மாலை, 6:00 மணிக்கு காற்றுடன் கனமழை கொட்டியது. தொடர்ந்து ஒரு மணி நேரம் பெய்தது. அதேபோல் சேலம் மாநகரின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.