sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏற்காடு வரத்தொடங்கிய சுற்றுலா பயணியர்

/

ஏற்காடு வரத்தொடங்கிய சுற்றுலா பயணியர்

ஏற்காடு வரத்தொடங்கிய சுற்றுலா பயணியர்

ஏற்காடு வரத்தொடங்கிய சுற்றுலா பயணியர்


ADDED : டிச 09, 2024 07:15 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காட்டில் இரு வாரங்களுக்கு முன் கனமழை பெய்தது. இதனால் அதன் மலைப்பாதை, கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு, சீரமைப்பு பணி நடந்தது வந்தது. மாவட்ட நிர்வாகமும், சுற்றுலா பயணியர் வர தடை விதித்திருந்தது. இதனால் ஏற்காடு வெறிச்சோடியது. 3 நாட்களுக்கு முன், சாலை உள்ளிட்ட சீரமைப்பு பணி முடிந்தது.

இந்நிலையில் ஞாயிறான நேற்று, ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணியர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. காலையில் குறைந்த அளவில் சுற்றுலா பயணியர் வந்தனர். மதியத்துக்கு மேல் கணிசமான அளவில் சுற்றுலா பயணியர் வந்தனர். இதனால் இரு வாரங்களாக வெறிச்சோடியிருந்த நிலை மாறியது. படகு இல்லத்தில் சுற்றுலா பயணியர், படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இருப்பினும் அண்ணா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், லேடீஸ், ஜென்ட்ஸ் சீட்டுகள் உள்ளிட்ட இடங்களில், சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைந்திருந்தது.






      Dinamalar
      Follow us