sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாக்கடை கால்வாய் பணி நிறுத்தியதால் அவதி

/

சாக்கடை கால்வாய் பணி நிறுத்தியதால் அவதி

சாக்கடை கால்வாய் பணி நிறுத்தியதால் அவதி

சாக்கடை கால்வாய் பணி நிறுத்தியதால் அவதி


ADDED : ஆக 07, 2025 01:38 AM

Google News

ADDED : ஆக 07, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், பேர்லண்ட்ஸ் தோப்புக்காட்டில், 8 கோடி ரூபாய் மதிப்பில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி, கடந்த ஆண்டு தொடங்கி நடந்த நிலையில், பாதியில் நிறுத்தப்பட்டது. குறிப்பாக, பிருந்தாவன் சாலை, 5வது கிராஸ் சாலையில் பணி நிறைவு பெறாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. கால்வாய்க்கு, 10 அடி அகலத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு, வீடுகளுக்குள் செல்ல முடியாமல் மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் சாக்கடை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தின் மீது கட்டைகள் வைத்து வீடுகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் குழந்தைகள் விழுந்துவிடுவரோ என குடும்பத்தினர் அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் நிறுத்த முடியாத சூழல் உள்ளது. இந்த அவதி, 5 மாதங்களாக தொடர்வதாக, மக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் செந்தில் கூறுகையில், ''இத்திட்டத்துக்கு பணப்பற்றாக்குறையால் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக, 15 லட்சம் ரூபாய்க்கு அனுமதி கிடைத்து விட்டதால், ஒரு வாரத்தில் பணி தொடங்கும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us