ADDED : டிச 26, 2024 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஓமலுார் அருகே காமலாபுரம் பிரிவு சாலையில், சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் சேலத்தில் இருந்து வரும் வாகனங்கள் செல்லும் சர்வீஸ் சாலை, ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுவதால், எளி-தாக வாகனங்கள் கடந்து செல்ல முடியவில்லை.
வார இறுதி நாட்களில் அந்த இடத்தை கடந்து செல்லும் வாக-னங்கள் தள்ளாடியபடி செல்லும்படி, பள்ளங்கள் உள்ளன. இதனால் சில நேரங்களில் மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகின்றனர்.
அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்-படுகிறது. மேம்பாலத்தின் சர்வீஸ் சாலைகளில் உள்ள பள்ளங்-களை சீரமைக்க, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

