sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏற்காட்டில் அடித்துச்சென்ற பாலம்உடனே சீரமைக்க வலியுறுத்தல்

/

ஏற்காட்டில் அடித்துச்சென்ற பாலம்உடனே சீரமைக்க வலியுறுத்தல்

ஏற்காட்டில் அடித்துச்சென்ற பாலம்உடனே சீரமைக்க வலியுறுத்தல்

ஏற்காட்டில் அடித்துச்சென்ற பாலம்உடனே சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : டிச 22, 2024 12:54 AM

Google News

ADDED : டிச 22, 2024 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு, டிச. 22-

ஏற்காட்டில் இருந்து, 8 கி.மீ.,ல், புத்துார் மலைக்கிராமம் உள்ளது. அங்குள்ள ஆற்றுப்பாலம், பெஞ்சல் புயலின்போது ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்சென்றது. இதனால் புத்துார் அடுத்துள்ள அரண்மனை காடு, பாறை கடை, புளியங்கடை உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள், பாலத்தை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மாறாக வெகுதுாரம் சுற்றிச்சென்று சிரமத்துக்கு ஆளாகினர்.

அதிகாரிகள் ஆய்வு செய்து புது பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என, தெரிவித்தனர். ஆனால், 20 நாட்களுக்கு மேலாகியும், அதற்கான எந்த பணியும் தொடங்கப் படவில்லை. வேறு வழியின்றி கிராம மக்கள், பாலத்தின் ஓரம் மரக்கட்டைகளை அடுக்கி வைத்து சிறு அளவில் பாலம் அமைத்துள்ளனர். அதில் ஆபத்தான முறையில் பாலத்தை கடந்து சென்று வருகின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரும், அச்சத்துடன் பாலத்தை கடந்து செல்கின்றனர். இதனால் அதிகாரிகள் புது பாலம் கட்ட, விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மலைக்கிராம மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us