/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வைகாசி விசாகம்: முருகன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
/
வைகாசி விசாகம்: முருகன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
வைகாசி விசாகம்: முருகன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
வைகாசி விசாகம்: முருகன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
ADDED : மே 23, 2024 07:23 AM
ஆத்துார் : வைகாசி விசாகத்தையொட்டி ஆத்துார் அருகே வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில் நேற்று, மூலவர் பாலசுப்ரமணியருக்கு பால், தயிர், நெய், மஞ்சள், சந்தனம் உள்பட, 16 வகை அபிேஷகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மூலவர், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார்.அதேபோல் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் மூலவர் தங்க கவசத்தில் அருள்பாலித்தார். மாலையில் திருக்கல்யாணம், தங்க தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆத்துார் வெள்ளை விநாயகர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், தலைவாசல், ஆறகளூர், தென்பொன்பரப்பி, வீரகனுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.திருக்கல்யாணம்தாரமங்கலம் சக்தி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண விழா நடந்தது. பக்தர்கள் சீர்வரிசை உடன், கோவில் வளாகத்துக்கு வந்தனர். அங்கு கணபதி ஹோமம் செய்து உற்சவ மூர்த்தியான முத்துகுமார சுவாமி, வள்ளி, தெய்வானை சுவாமிக்கு பூக்களால் அலங்காரம் செய்தனர். வேத மந்திரம் முழங்க சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், அரோகரா கோஷம் முழங்க சுவாமியை தரிசித்தனர். தொடர்ந்து சுவாமி திருக்கல்யாண கோலத்தில் முக்கிய வீதிகளில் திருவீதி உலா நடந்தது. அதேபோல் தாரமங்கலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள சுப்ரமணியர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

