sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வேன் டிரைவரை தாக்கி ரூ.24 லட்சம் வழிப்பறி: புரோக்கர் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை

/

வேன் டிரைவரை தாக்கி ரூ.24 லட்சம் வழிப்பறி: புரோக்கர் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை

வேன் டிரைவரை தாக்கி ரூ.24 லட்சம் வழிப்பறி: புரோக்கர் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை

வேன் டிரைவரை தாக்கி ரூ.24 லட்சம் வழிப்பறி: புரோக்கர் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை


ADDED : பிப் 16, 2024 12:47 PM

Google News

ADDED : பிப் 16, 2024 12:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: வேன் டிரைவரை தாக்கி, 24 லட்சம் ரூபாய் பறித்துச்சென்ற, புரோக்கர் உள்பட, 3 பேருக்கு, தலா, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு, மன்னார்காடு, வடகோட்டத்துறையை சேர்ந்த, மிளகு வியாபாரி முகமது அலி. இவரிடம் வேன் டிரைவராக, அதே பகுதியை சேர்ந்த வீராசாமி, 33, பணிபுரிந்தார். இவர், 2015 ஜூன், 11ல், 24.40 லட்சம் ரூபாயுடன் மிளகு வாங்க, ஏற்காடு, செம்மநத்தத்தை சேர்ந்த, மிளகு, நில புரோக்கர் சண்முகத்தை அழைத்துக்கொண்டு, கொல்லிமலைக்கு வேனில் புறப்பட்டார்.

நள்ளிரவு, 12:45 மணிக்கு, சேலம், பனமரத்துப்பட்டி ஏரிக்கரை அருகே சிறுநீர் கழிக்க, சண்முகம் இறங்கினார். ஆனால், திரும்ப வரவில்லை. இந்நிலையில் ஆம்னி வேன், பைக்குகளில் வந்த கும்பல், வீராசாமியை மிரட்டி, கட்டையால் தாக்கி, அவரிடம் இருந்த, 24.40 லட்சம் ரூபாயை பறித்து சென்றது.

பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, புரோக்கர் சண்முகம், 42, அவரது கூட்டாளிகளான, தாசநாயக்கன்பட்டி பாஸ்கரன், 32, கார்த்திக், 30, உள்பட, 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் மாவட்ட இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் பாஸ்கரன், கார்த்திக், சண்முகம் ஆகியோருக்கு தலா, 10 ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ரவி நேற்று உத்தரவிட்டார். மற்றவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us