/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லஞ்சம் வாங்கி கைதான வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'
/
லஞ்சம் வாங்கி கைதான வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 13, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம், பனமரத்துப்பட்டி, தும்பல்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த், 22.
கூலித்தொழிலாளியான இவர், தாத்தா பெயரில் உள்ள நிலத்தை, அவரது பெயருக்கு பட்டா பெறுவதற்கு, தும்பல்பட்டி வி.ஏ.ஓ., பாலம்மாள், 47, என்பவரிடம் விண்ணப்பித்தார். சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டதால், லஞ்ச ஒழிப்பு போலீஸ் துறையிடம் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனைப்படி, அரவிந்த், கடந்த, 10ல், 15,000 ரூபாய் கொடுத்தார். அப்போது, வி.ஏ.ஓ., பாலம்மாளை, போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, நேற்று ஆர்.டி.ஓ., அம்பாயிரநாதன் உத்தரவிட்டார்.

