sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கடனை திருப்பி கேட்ட பெண்ணிடம் அத்துமீறல் வி.சி., கட்சி - மாவட்ட செயலர் கைது

/

கடனை திருப்பி கேட்ட பெண்ணிடம் அத்துமீறல் வி.சி., கட்சி - மாவட்ட செயலர் கைது

கடனை திருப்பி கேட்ட பெண்ணிடம் அத்துமீறல் வி.சி., கட்சி - மாவட்ட செயலர் கைது

கடனை திருப்பி கேட்ட பெண்ணிடம் அத்துமீறல் வி.சி., கட்சி - மாவட்ட செயலர் கைது


ADDED : செப் 03, 2025 02:38 AM

Google News

ADDED : செப் 03, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், கடனை திருப்பி கேட்ட பெண்ணை, மானபங்கப்படுத்த முயற்சி செய்த, வி.சி., கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி, மாவட்ட செயலரை, போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் நரசிங்புரம், தெற்கு தில்லை நகரை சேர்ந்தவர் இளையராஜா, 44. வி.சி., கட்சியின், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலராக உள்ளார். இவர், 8 ஆண்டுக்கு முன், நரசிங்கபுரம், பெரியார் நகரை சேர்ந்த சுமதி, 45, என்பவரிடம், 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். இத்தொகையை கேட்டபோது, இளையராஜா தர மறுத்தார். இதனால் சுமதி, ஆத்துார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பாக கடந்த ஜூலை, 13ல், ஆலமரம் பஸ் ஸ்டாப் பகுதியில், இருவரும் தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று, விநாயகபுரம், கூட்ரோடில் நடந்து சென்ற சுமதியை வழிமறித்து தாக்கிய இளையராஜா, தொடர்ந்து சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றார்.

சுமதி புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரித்து, மானபங்க முயற்சி உள்பட, 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து இளையராஜாவை, நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us