sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏற்காட்டில் வாகனங்களுக்கு தடை

/

ஏற்காட்டில் வாகனங்களுக்கு தடை

ஏற்காட்டில் வாகனங்களுக்கு தடை

ஏற்காட்டில் வாகனங்களுக்கு தடை


ADDED : அக் 23, 2025 01:56 AM

Google News

ADDED : அக் 23, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு, ஏற்காட்டில் நேற்று முன்தினம் அதிகாலை முதல், தொடர் மழை பெய்தது. நேற்றும் ஏற்காடு, அதன் சுற்றுப்பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் புலியூர் மலை கிராமத்துக்கு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில், மழைநீர் அதிக அளவில் சென்றது.

இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர். அதேபோல் குப்பனுார் மலைப்பாதையில் உள்ள ஆத்துப்பால பகுதியில் ஓடும் ஆறு உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.நிலச்சரிவு

குப்பனுார் மலைப்பாதை, கொட்டச்சேடு கிராமத்தை அடுத்து மலைப்பாதை ஓர சாலையின் தடுப்புச்சுவர் சரிந்து, சிறு அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறையினர், அங்கு தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். அதேபோல், கொண்டையனுார் மலைக்கிராமத்துக்கு செல்லும் சாலை ஓரம் இருந்த சவுக்கு மரம், வேரோடு சாய்ந்து, 2 மின்கம்பங்கள் சாய்ந்து, கம்பிகள் அறுந்ததால், மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய பணியாளர்கள், மக்கள் உதவியுடன் சாலை குறுக்கே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி, கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தொடர் மழையால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு, 7:00 மணி முதல், வரும், 24 வரை, ஏற்காடு பிரதான மலைப்பாதையான, கொண்டப்பநாயக்கன்பட்டி மலைப்பாதையில் சுற்றுலா மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்தும், குப்பனுார் மலைப்பாதையில், 4 சக்கர வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்தும், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us