sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மோசடி செய்த பல கோடி ரூபாயை திருப்பி தருவதாக தகவல் சேசன்சாவடியில் குவிந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏமாற்றம்

/

மோசடி செய்த பல கோடி ரூபாயை திருப்பி தருவதாக தகவல் சேசன்சாவடியில் குவிந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏமாற்றம்

மோசடி செய்த பல கோடி ரூபாயை திருப்பி தருவதாக தகவல் சேசன்சாவடியில் குவிந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏமாற்றம்

மோசடி செய்த பல கோடி ரூபாயை திருப்பி தருவதாக தகவல் சேசன்சாவடியில் குவிந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏமாற்றம்


ADDED : ஜூன் 15, 2025 02:18 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி, சேலத்தில் தனியார் நிறுவனம் முதலீடு பெற்று, பல கோடி ரூபாய் மோசடி செய்த நிலையில், வாடகை கட்டடத்தை காலி செய்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பணத்தை திருப்பி தருவதாக கிடைத்த தகவலை அடுத்து, சேசன்சாவடி தனியார் மண்டபத்துக்கு படையெடுத்தனர். ஆனால் மண்டபம் பூட்டியிருந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.

சேலத்தில் செயல்பட்ட, 'ரீகிரியேட் பியூச்சர் இந்தியா' நிறுவனம், மோசடி செய்த பணத்தை திருப்பி தருவதாக தெரிவித்ததால், வாழப்பாடி, ஆத்துார், ஓமலுார், மேட்டூர் உள்பட, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர், நேற்று மதியம், 2:00 மணிக்கு, வாழப்பாடி, சேசன்சாவடி அருகே உள்ள தனியார் மண்டபம் முன் குவிந்தனர். ஆனால் மண்டபம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள், அவர்களுக்குள் புலம்பிக்கொண்டிருந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சேலம், ஸ்வர்ணபுரியில் உள்ள வாடகை கட்டடத்தில் செயல்பட்ட தனியார் நிறுவனம், முதலீடு செய்தால், ஒரு மாதத்தில் இரு மடங்காகவும், 70 நாட்களில், 3 மடங்காகவும் தருவதாக தெரிவித்தனர். சேலம் மாவட்டத்தில் இருந்து, 15,000க்கும் மேற்பட்டோர், கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். தொடர்ந்து, தெரிந்தவர்களை இத்திட்டத்தில் இணைத்தால் கூடுதல் வருவாய்; அதற்கு மாத சம்பளம் கிடைக்கும் என தெரிவித்தனர். அதன்படி பலரையும் சேர்த்துவிட்டோம். இதன்மூலம் பல கோடி ரூபாய் முதலீடு பெற்றனர். எந்த ரசீதும் வழங்கவில்லை. வெளியே சொல்லக்கூடாது என்றும் தெரிவித்தனர். இரு மாதங்களுக்கு முன் அந்த நிறுவனம் மூடப்பட்டது. அங்கு சென்று கேட்டபோது, வாடகைக்கு இருந்த நிறுவனம் காலி

செய்து விட்டது என கூறினர்.

இதனால் முதலீடு செய்த நாங்கள் ஏமாற்றம் அடைந்தோம். அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த, 'டீம் லீடர்', 'நிறுவனரை போலீஸ் பிடித்து விட்டது. ரவுடிகள் பணம் கேட்டு மிரட்டி பணத்தை பெற்றுக்கொண்டனர். முதலீடு செய்தவர்களின் பணம் சிக்கிக்கொண்டதால் தர இயலாது' என தெரிவித்தார். மேலும் போலீஸ், பத்திரிகையில் தெரிவித்தால் பணம் கிடைக்காது என தெரிவித்தனர். இதனால் என்ன செய்வது என தெரியவில்லை.

இந்நிலையில்தான் சேசன்சாவடியில் உள்ள தனியார் மண்டபத்தில், அந்த நிறுவனர், பணம் போட்ட மக்களை சந்திக்க உள்ளதாக, அந்த நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள், போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதை நம்பி, இங்கு வந்தபோது யாரும் இல்லாதது அதிருப்தியை ஏற்படுத்தியது. போலீசார் விசாரித்து, எங்கள் பணத்தை மீட்டுத்தந்து, மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சேசன்சாவடியில் பாதிக்கப்பட்டவர்கள் குவிந்துள்ளதை அறிந்தும் சம்பவ இடத்துக்கு போலீசார் யாரும் வரவில்லை.

இதுகுறித்து வாழப்பாடி போலீசாரிடம் கேட்டபோது, 'இதுதொடர்பாக யாரும் புகார் கொடுக்கவில்லை. புகார் அளித்தால்தான் விசாரிக்கப்படும்' என்றனர்.

கட்டைக்காலுடன் 10 மணி நேரம்






      Dinamalar
      Follow us