sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலம் அ.ம.மு.க., கூட்டத்தில் விதி மீறல்: நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் மனு

/

சேலம் அ.ம.மு.க., கூட்டத்தில் விதி மீறல்: நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் மனு

சேலம் அ.ம.மு.க., கூட்டத்தில் விதி மீறல்: நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் மனு

சேலம் அ.ம.மு.க., கூட்டத்தில் விதி மீறல்: நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் மனு


ADDED : ஜன 30, 2024 03:17 PM

Google News

ADDED : ஜன 30, 2024 03:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலத்தில் நடந்த, அ.ம.மு.க., கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி பேனர், கொடிகள் கட்டப்பட்டுள்ளதால், நடவடிக்கை எடுக்க கோரி, நேற்று தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் மாநில தலைவர் பூமொழி, போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியிடம் புகார் மனு அளித்தார்.அதில் கூறியிப்பதாவது:சேலத்தில், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி சார்பில் கொடி கம்பம் அமைக்க, தெற்கு சரக துணை கமிஷனர் மதிவாணனிடம் கோரிக்கை மனு அளித்தோம்.

ஆனால், பொது இடங்களில் எந்த கொடி கம்பங்களும், பேனர்களும் வைக்க அனுமதிக்கக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.அதே நேரத்தில், நேற்று முன்தினம் குரங்குசாவடி பஸ் ஸ்டாப்பில், போலீஸ் பாதுகாப்புடன், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அக்கட்சியின் கொடியை ஏற்றி உள்ளார். எனவே, பொது இடத்தில் கொடி கம்பத்தை வைத்தவர்கள் மீதும், கொடியேற்றிய தினகரன், பாதுகாப்பு வழங்கிய போலீஸ் அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்ததாக வழக்குப்பதிவு செய்து. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us