ADDED : ஜூலை 10, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
கெங்கவல்லி:நாகப்பட்டினம்
மாவட்டம் நெம்மேலியை சேர்ந்தவர் ராமையன், 57. இவர் சேலம் மாவட்டம்
கெங்கவல்லியில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிப கிடங்கின் காவலாளியாக
பணிபுரிந்தார். நேற்று முன்தினம், அதே பகுதியில், சுவேத நதி கரையில்
உள்ள சிவன் கோவில் வாசல் முன் இறந்து கிடந்தார்.
உடலை கைப்பற்றி
கெங்கவல்லி போலீசார் விசாரித்ததில், இரு நாட்களாக தொடர்ந்து மது
அருந்தியதால், ராமையன் உயிரிழந்தது தெரிந்தது. அவரது
குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்த போலீசார், நேற்று
வழக்குப்பதிந்தனர்.
