sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விபத்தில் தந்தை கண்முன் மகள் பலி உயிரை பறித்தது லாரியா - பள்ளமா?

/

விபத்தில் தந்தை கண்முன் மகள் பலி உயிரை பறித்தது லாரியா - பள்ளமா?

விபத்தில் தந்தை கண்முன் மகள் பலி உயிரை பறித்தது லாரியா - பள்ளமா?

விபத்தில் தந்தை கண்முன் மகள் பலி உயிரை பறித்தது லாரியா - பள்ளமா?


ADDED : ஜூலை 07, 2025 03:58 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: விபத்தில் தந்தை கண்முன் மகள் பலியான நிலையில், லாரி மோதியதில் விழுந்து இறந்தாரா அல்லது சாலை பள்ளத்தில் இறங்கியபோது தடுமாறி விழுந்த பின் லாரி ஏறி இறந்தாரா என்-பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம், 52. அதே பகுதியில் எலக்ட்ரானிக் கடை வைத்துள்ளார். இவரது மூத்த மகள் எம்.பி.ஏ., பட்டதாரி வித்யா, 25, இளைய மகள் எம்.எஸ்சி., பட்-டதாரி பிரியா, 23. இவர்கள், சேலத்தில் உள்ள உறவினரின் பிறந்-தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்று இரவு, 9:40 மணிக்கு வீட்டுக்கு, 'ஜூபிடர்' மொபட்டில் புறப்பட்டனர். ஹெல்மெட் அணிந்து, சிவப்பிரகாசம் ஓட்டினார்.சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வாழப்பாடி அருகே மத்துார் பிரிவு சாலையில் சென்றபோது, லாரி ஏறியதில் பிரியா தலை நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சிவப்பிரகா-சத்தின் கால், லாரி சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். வித்யா காயமின்றி தப்பினார்.

இதை அறிந்து அங்கு விரைந்து வந்த, ஏத்தாப்பூர் போலீசார், சிவப்பிரகாசத்தை வாழப்பாடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்-பினர். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவ-மனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: மத்துார் பிரிவு சாலை அருகே சென்றபோது, பள்ளத்தில் மொபட்டை விட்டதில் நிலை தடுமாறி, 3 பேரும் விழுந்தனர். வலதுபுறம் பிரியா விழுந்தார். அப்போது வந்த லாரி, பிரியா மீது ஏறியது, விசாரணையில் தெரிந்தது. ஆனால் காயம் அடைந்த சிவப்பிரகாசம், லாரி மோதி-யதால் தடுமாறி விழுந்ததாகவும், பின் லாரி ஏறி மகள் இறந்ததா-கவும் தெரிவித்துள்ளார். அதேநேரம் லாரி டிரைவரும் தலைமறை-வாகியுள்ளார். இதனால் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்-வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us