ADDED : நவ 28, 2024 03:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. அதன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குற்றங்கள் நடக்காமல் இருக்க, போலீஸ் ஸ்டேஷனில் பூஜை செய்து, பூசணிக்காய், எலுமிச்சை பழத்தை வெட்டி ஸ்டேஷனின் நான்கு மூலைகளில் வைத்து, நுழைவு வாயிலில் மஞ்சள் குங்குமம் வைத்து பூ அணிவித்து வழிபாடு நடத்தப்பட்டதாக படங்கள் பரவின.
எனினும், போலீசார் இதுகுறித்து கூறும் போது, ''போலீஸ் ஸ்டேஷன் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு, கட்டுமான பணி மேற்கொள்வோர், பூஜை செய்து பணியை தொடங்கி இருப்பர். போலீசார் சார்பில் எந்த பூஜையும் செய்யவில்லை' என்றனர்.