/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சம்பல்பூர் - ஈரோடு இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்
/
சம்பல்பூர் - ஈரோடு இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்
சம்பல்பூர் - ஈரோடு இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்
சம்பல்பூர் - ஈரோடு இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்
ADDED : டிச 10, 2024 07:56 AM
சேலம்: ஒடிசா மாநிலம் சம்பல்பூர்-ஈரோடு இடையே, அதிகரித்து வரும் ரயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, வாராந்-திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன.இது தொடர்பாக, சேலம் ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:நாளை முதல் ( டிச., 11) மார்ச், 5 வரை புதன்கிழமைகளில் சம்-பல்பூரில் இருந்து காலை, 11:35 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் இரவு, 8:30 மணிக்கு ஈரோடு சென்றடையும். இந்த ரயில், ஜோலார்பேட்டை, சேலம் வழியாக ஈரோடு செல்கிறது.
மறுமார்க்க ரயில் வரும், 13 முதல் மார்ச், 7 வரை வெள்ளிக்கிழ-மைகளில், ஈரோட்டில் இருந்து மதியம், 2:45
மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு, 11:15 மணிக்கு சம்பல்பூர் சென்றடைகிறது.