sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏற்காடு பகுதிகளில் பரவலாக மழை

/

ஏற்காடு பகுதிகளில் பரவலாக மழை

ஏற்காடு பகுதிகளில் பரவலாக மழை

ஏற்காடு பகுதிகளில் பரவலாக மழை


ADDED : ஜூலை 22, 2025 01:20 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு, ஏற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன், மந்தமாக இருந்து வந்தது. இந்நிலையில் மாலை, 4:20 மணிக்கு ஏற்காடு மற்றும் சுற்று பகுதி முழுவதும் இடி மின்னலுடன் கூடிய கனமழை, 6:15 மணி வரை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து கனமழை குறைந்து சாரல் மழையாக இரவு 7:55 மணி வரை பெய்தது. இதனால், ஏற்காட்டில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது.

* ஆத்துார் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை மழை பெய்தது. இந்நிலையில் நேற்று மாலை, 6:00 முதல், இரவு, 7:00 மணி வரை, மழை பெய்தது. இதனால் சாலை, தெருக்களில் மழை நீர் ஓடியது.

* வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், மேட்டுப்பட்டி, கருமந்துறை, ஏத்தாப்பூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை, 5:00 மணிக்கு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது. இதனால் நெடுஞ்சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக, ஒரு மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டது. தொடர் மழையால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us