/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கணவன் கண்முன்னே விபத்தில் மனைவி பலி
/
கணவன் கண்முன்னே விபத்தில் மனைவி பலி
ADDED : அக் 13, 2024 08:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த பேளூரை சேர்ந்தவர் பிரபு, 40. இவரது மனைவி சத்தியபிரியா, 36. இவர்களுக்கு இரு பெண் குழந்-தைகள் உள்ளனர்.
தம்பதியர், அதே பகுதியில் ஓட்டல் நடத்தினர். மளிகை, காய்கறி வாங்க சேலம் சென்று விட்டு, நேற்று மாலை, 6:45 மணிக்கு, பேளூர் நோக்கி, 'யமஹா லிபரோ' பைக்கில் சென்று கொண்டி-ருந்தனர்.
பேளூர் பிரிவு சாலையில் சென்றபோது, கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பஸ், பைக் பின்புறம்
மோதியது. இதில் தடுமாறி பிரபு, சத்தியபிரியா விழுந்தனர். அப்போது பஸ்சின் பின்புற
சக்க-ரத்தில் சிக்கி சத்தியபிரியா தலை நசுங்கி உயிரிழந்தார். வாழப்-பாடி போலீசார், பஸ்
டிரைவரிடம் விசாரிக்கின்றனர்.