ADDED : ஆக 19, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கன்னங்குறிச்சி சின்ன கொல்லப்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி, 28. இவரது மனைவி, பிரியங்கா, 24. கடந்த, 16ல் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த பிரியங்கா, வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் நேற்று முன்தினம் கன்னங்குறிச்சி போலீசில் மூர்த்தி புகார் அளித்தார்.