/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றிகள் மீட்பு
/
கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றிகள் மீட்பு
ADDED : டிச 27, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் அருகே பைத்துாரை சேர்ந்தவர் பச்சையம்மாள், 50. இவரது தோட்டத்தில் உள்ள, 50 அடி ஆழ கிணற்றில், நேற்று காலை, 8:30 மணிக்கு, இரு காட்டுப்பன்றிகள் தவறி விழுந்தன.
இதை அறிந்த, கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர், ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், வலை மூலம் கிணற்றில் விழுந்த இரு காட்டுப்பன்றிகளையும் மீட்டனர். பின் வனப்பகுதியில் விட்டனர்.

