/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
25 பவுன் நகைகளை திருப்பித்தரவில்லை மாமியார், கணவர் மீது பெண் புகார்
/
25 பவுன் நகைகளை திருப்பித்தரவில்லை மாமியார், கணவர் மீது பெண் புகார்
25 பவுன் நகைகளை திருப்பித்தரவில்லை மாமியார், கணவர் மீது பெண் புகார்
25 பவுன் நகைகளை திருப்பித்தரவில்லை மாமியார், கணவர் மீது பெண் புகார்
ADDED : ஜூன் 27, 2025 01:26 AM
மேட்டூர், மேட்டூர், மாதையன்குட்டையை சேர்ந்தவர் மோகனப்ரியா, 27. இவர் நேற்று, மேட்டூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனு:
சேலம், அம்மாபேட்டை, காமராஜர் நகரை சேர்ந்தவர் தினேஷ், 31. வருமான வரித்துறை அலுவலக உதவியாளராக பணிபுரிகிறார். இவருக்கும், எனக்கும், 2020 நவம்பரில் திருமணமானது. அதே மாதம், மாமியார் தனலட்சுமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
அவரை, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். சிகிச்சை செலவுக்கு, பெற்றோர் போட்ட, 25 பவுன் நகைகளை, கணவரிடம் கொடுத்தேன். சில நாட்களில் திருப்பி கொடுப்பதாக, கணவர், மாமியார் கூறினர். ஆனால் குணமாகி வீட்டுக்கு வந்து வெகுநாட்கள் ஆகியும் திருப்பி கொடுக்கவில்லை.இதுகுறித்து கேட்டபோது மாமியார் திட்டினார். பின் தினேஷூம், நானும், 2023ல், மாதையன்குட்டையில் தனி குடித்தனம் சென்றோம். அப்போது நகையை கேட்கும் போதெல்லாம், கணவர் திட்டினார். பின் அவர், என்னை விட்டு, அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். நகையை தராமல் ஏமாற்றிய தனலட்சுமி, மிரட்டிய தினேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.