sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருமணமான ஒரு வாரத்துக்கு பின் காதலனை மணந்து போலீசில் பெண் தஞ்சம்

/

திருமணமான ஒரு வாரத்துக்கு பின் காதலனை மணந்து போலீசில் பெண் தஞ்சம்

திருமணமான ஒரு வாரத்துக்கு பின் காதலனை மணந்து போலீசில் பெண் தஞ்சம்

திருமணமான ஒரு வாரத்துக்கு பின் காதலனை மணந்து போலீசில் பெண் தஞ்சம்


ADDED : ஜூன் 16, 2025 06:51 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: உறவினரை திருமணம் செய்து கொண்ட பெண், ஒரு வாரத்துக்கு பின் வீட்டில் இருந்து வெளியேறி, அவரது காதலனை திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தார்.

திருப்பத்துார், வக்கனம்பட்டியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 21. பி.சி.ஏ., முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். இவருக்கு கடந்த, 8ல், உறவினர் சூர்யாவுடன், இருவரது பெற்றோர் சம்மதத்துடன் திருமணமானது. ஆனால் நேற்று பிரியதர்ஷினியும், சேலம் மாவட்டம் ஏற்காடு, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த, தனியார் தங்கும் விடுதியில் பணிபுரியும் சந்தோஷ், 22, என்பவரும், திரு-மணம் செய்து கொண்டதாக கூறி, குடும்பத்தினரிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு, ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்-தனர். அவர்களிடம், போலீசார் விசாரித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

பிரியதர்ஷினி, சந்தோஷ், 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழகி காதலித்-துள்ளனர். பிரியதர்ஷினி குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி, அவ-ருக்கு சூர்யாவுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். அத்திரு-மணம் பிடிக்காததால், காதலனுடன், ஏற்காடு அடிவாரத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் நேற்று முன்தினம் திரு-மணம் செய்து கொண்டார். விசாரணைக்கு, பெண்ணின் பெற்-றோரை அழைத்ததற்கு வரவில்லை. சி.எஸ்.ஆர்., பதிவு செய்து அனுப்பிவைத்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் 2 ஜோடிகள்

விழுப்புரம், உளுந்துார்பேட்டை, புத்துார் காலனியை சேர்ந்தவர் ஜெயசூர்யா, 26. ஏற்காடு டேங்க் புதுாரை சேர்ந்தவர் ஸ்ரீஜா, 19. இருவரும் காதலித்த நிலையில் திருமணம் செய்து கொண்டு, ஏற்-காடு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். அதேபோல் ஏற்-காடு, மைலப்பட்டியை சேர்ந்தவர் பிரியங்கா, 21, ஏற்காடு, முருகன் நகரை சேர்ந்த நிஷாந்த், 24, ஆகியோர், ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். இதுதொடர்பாக, இரு ஜோடிகளின் பெற்றோரை அழைத்து, போலீசார் விசாரித்து அனுப்பிவைத்தனர்.






      Dinamalar
      Follow us