ADDED : ஜூலை 10, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம்,
கிச்சிப்பாளையம், வேல் முருகன் நகரை சேர்ந்தவர் காயத்ரி, 35. இவரது
கணவர் ஆறுமுகம், ஓராண்டுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில்,
அவரது பள்ளி நண்பரான, ஏற்கனவே திருமணமான ராஜவேலுடன்,
காயத்ரிக்கு பழக்கம் ஏற்பட்டது.
அவர், காயத்ரிக்கு தனியே வீடு
வாடகைக்கு எடுத்து கொடுத்து, அவருடன் குடும்பம் நடத்தி வந்தார். நேற்று
முன்தினம் ராஜவேல், காயத்ரி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின் அன்று
மதியம் ராஜவேலிடம் பிரியாணி வாங்கி வரும்படி காயத்ரி கூறியுள்ளார்.
ராஜவேல், பிரியாணி வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தபோது, காயத்ரி
துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. கிச்சிப்பாளையம்
போலீசார், உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து
விசாரிக்கின்றனர்.
