/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புதர் மண்டிய கழிப்பிடம் பெண்கள் அவதி
/
புதர் மண்டிய கழிப்பிடம் பெண்கள் அவதி
ADDED : ஜன 20, 2025 07:16 AM
சேலம்: சேலம் மாநகராட்சி, 27வது வார்டு அரிசிபாளையம், அவ்வையார் மார்க்கெட்டில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதி மக்கள் கோரிக்கையால், 2005ல் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது.
தற்போது பயன்பாடின்றி மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.இதுகுறித்து பெண்கள் கூறியதாவது: கழிப்பிடத்துக்கு தண்ணீர் வராததால் தெருவில் உள்ள பொது குழாயில் பிடித்து செல்ல வேண்டியிருந்தது. தற்போது கழிப்பிடம் புதர் மண்டி, கதவு உடைந்து கட்டடமும் சிதலமடைந்துள்ளனது. அடிக்கடி பாம்பு வருவதால் அச்சமாக உள்ளது. இதனால், 1 கி.மீ., சென்று, மற்றொரு கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.