/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கழிவறை இல்லாமல் அவதிப்படும் பெண்கள்
/
கழிவறை இல்லாமல் அவதிப்படும் பெண்கள்
ADDED : செப் 28, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி, செப். 28-
சித்தர்கோயில் அடிவாரத்தில்
பாரதிநகர், சத்யாநகர் உள்ளிட்ட பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோருக்கு கழிப்பிட வசதியில்லை.
இதனால், பெண்கள் அருகில் உள்ள மலைத்தொடருக்கு செல்லும் அவலநிலை உள்ளது. இரவில் செல்லும் பெண்களை, மது போதையில் குடிமகன்கள் கேலி, கிண்டல் செய்கின்றனர். சிலர் விஷக்கடிக்கு உள்ளாகின்றனர். எனவே, பெண்கள் பாதுகாப்பு கருதி கழிவறை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.