ADDED : நவ 08, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:ஆத்துார்,
புதுப்பேட்டை, வ.உ.சி., நகரை சேர்ந்த, கூலித்தொழிலாளி பழனிசாமி,
68. இவர், கடந்த அக்., 30ல், புதுப்பேட்டையில் உள்ள திப்புசுல்தான்
ஜாமியா பள்ளி தென்னந்தோப்பு பகுதியை சுத்தம் செய்யும் வேலைக்கு
சென்றார்.
அப்போது, பாம்பு தீண்டியதில் பழனிசாமி மயங்கினார். அவரை,
மக்கள் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
அவர் நேற்று உயிரிழந்தார். ஆத்துார் டவுன் போலீசார்
விசாரிக்கின்றனர்.

