ADDED : ஜூன் 08, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம், தாரமங்கலம், பாப்பம்பாடி ஓடக்காட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. தறித்தொழில் செய்து வந்தார். இவரது தாய் இறந்துவிட்டதால், மாமா ரத்னவேல் வீட்டில் வசித்தார்.
சதீஷ்குமாருக்கு சிறு வயது முதலே, இதயத்தில் பிரச்னை இருந்ததால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு நெஞ்சுவலி அதிகமாக, சின்னப்பம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்றார். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். ரத்னவேல் புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.