/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முயல் வேட்டைக்கு முயற்சி; தொழிலாளிக்கு அபராதம்
/
முயல் வேட்டைக்கு முயற்சி; தொழிலாளிக்கு அபராதம்
ADDED : மே 31, 2025 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடி வனச்சரக அலுவலர் அன்னப்பன் தலைமையில் வனத்துறையினர், நேற்று செக்கடிப்பட்டி அருகே காப்புக்காடு பெருமாள் கோவில் பகுதியில், 'ரோந்து' பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கம்பி வலையை விரித்து, முயல் வேட்டைக்கு முயன்ற, குறிச்சியை சேர்ந்த கூலித்தொழிலாளி முத்து, 55, என்பவரை பிடித்தனர். பின் கம்பி வலைகளை பறிமுதல் செய்து, 30,000 ரூபாய் அபராதம் வசூலித்து, எச்சரித்து அனுப்பினர்.