ADDED : அக் 07, 2024 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், கூலிப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி, 54. கல் உடைக்கும் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம், சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியில் உள்ள உற-வினர் வீட்டுக்கு வந்தார்.
நேற்று காலை, 6:30 மணிக்கு பொய்மான் கரடு அருகே உள்ள கடையில் காபி குடித்து விட்டு, சேலம் - நாமக்கல் நெடுஞ்சா-லையை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வேகமாக சென்ற, 'செவ்ரோலெட் க்ரூஸ்' கார், பழனிசாமி மீது மோதியது. படுகாயமடைந்த அவர், சீலநாயக்கன்-பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார். மல்லுார் போலீசார் விசாரிக்-கின்றனர்.

