ADDED : ஜன 28, 2025 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: தனியார் பஸ் மோதி, பைக் மெக்கானிக் தொழிலாளி உயிரிழந்தார்.
தலைவாசல் அருகே, வரகூர் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் சண்முகம், 20. மெக்கானிக் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் தலைவாசல், மும்முடி பஸ் ஸ்டாப் வழியாக 'பஜாஜ்' பைக்கில் சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த 'ரமணி' என்ற தனியார் பஸ், பைக் மீது மோதியது. இந்த விபத்தில், மெக்கானிக் தொழிலாளி உயிரிழந்தார். இதுகுறித்து, தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.