sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மனைவி, குழந்தைகள் பிரிந்ததால் தொழிலாளி விபரீத முடிவு

/

மனைவி, குழந்தைகள் பிரிந்ததால் தொழிலாளி விபரீத முடிவு

மனைவி, குழந்தைகள் பிரிந்ததால் தொழிலாளி விபரீத முடிவு

மனைவி, குழந்தைகள் பிரிந்ததால் தொழிலாளி விபரீத முடிவு


ADDED : ஜூன் 17, 2025 01:10 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்,மனைவி, குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டதால், விரக்தியடைந்த தொழிலாளி விஷ மாத்திரைகள் சாப்பிட்டு இறந்தார்.

மேட்டூர், குள்ளவீரன்பட்டி கூலி தொழிலாளி ஆரோக்கியசாமி, 48. இவர் கடந்த, 2010ல் கேரளாவை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு, மேட்டூர், குள்ளவீரன்பட்டியில் வசித்தார். தம்பதியருக்கு சுஜன், சுஜித்ரா என்ற மகன், மகள் உள்ளனர்.

தம்பதியர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் கடந்த, 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர். சில வாரங்களுக்கு முன்பு, மகாலட்சுமி தனது குழந்தைகளுடன் கேரளாவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். ஆரோக்கியசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு மதுவுடன், தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் விஷ மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us