ADDED : ஏப் 24, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்:
தொளசம்பட்டியில் உள்ள ஊர்புற நுாலகத்தில், உலக புத்தக தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நுாலக வாசகர் வட்டம், அஹிம்சை சிகரம் அறக்கட்டளை இணைந்து, விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
தொளசம்பட்டி பிரதான சாலையில் சென்ற பேரணியில், மாணவ, மாணவியர், 'கைபேசியை சிறையிலிடு; புத்தகங்களை கையிலெடு' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்றனர். பின் சந்தை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். நுாலகர் குமார், வாசகர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

