/உள்ளூர் செய்திகள்/சேலம்/விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவி புகார் சில்மிஷம் செய்த வாலிபர் சிக்கினார்
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவி புகார் சில்மிஷம் செய்த வாலிபர் சிக்கினார்
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவி புகார் சில்மிஷம் செய்த வாலிபர் சிக்கினார்
ADDED : ஆக 14, 2026 04:26 AM
அ நிறம் | அளவு
வாழப்பாடி: பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த, 15 வயது சிறுமி, அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார். அச்சிறுமி படிக்கும் பள்-ளியில், கடந்த, 10ல், பாலியல் துன்புறுத்தல் குறித்து விழிப்பு-ணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது சிறுமி, அவருக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து தலைமை ஆசிரியையிடம் தெரி-வித்தார்.
இதுகுறித்த புகாரில், வாழப்பாடி மகளிர் போலீசார் விசாரித்து, பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வீரமணி, 40, என்பவர் மீது, 'போக்சோ' வழக்கு பதிந்தனர். நேற்று, அவரை கைது செய்-தனர்.போலீசார் கூறுகையில், 'சிறுமியின் பெற்றோர் இடையே கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் சிறுமியின் தாயிடம், வீரமணி பழகி வந்துள்ளார். இதில் அடிக்கடி வீரமணி, சிறுமி வீட்டுக்கு சென்றபோது அவரிடம் சில்மிஷம் செய்தது தெரியவந்தது' என்றனர்.
