ADDED : அக் 01, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொபைல் போன்
திருடிய வாலிபர் கைது
சேலம், அக். 1-
சேலத்தில், மொபைல்போன் திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், அன்னதானப்பட்டி மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஸ்வின், 22. நேற்று முன்தினம் இரவு தன் வீட்டில், மொபைல்போனை அருகில் வைத்துக்கொண்டு துாங்கியுள்ளார்.கண்விழித்து பார்த்த போது, போனை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், கிச்சிபாளையம், காளிகவுண்டர் காடு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், 39, என்பவரை கைது செய்து, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.