sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் சிக்கினார்

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் சிக்கினார்

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் சிக்கினார்

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் சிக்கினார்


ADDED : அக் 29, 2025 03:49 AM

Google News

ADDED : அக் 29, 2025 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே மேம்பாலத்தில் அக். 25ல், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த, தச்சு தொழிலாளி பிரம்மநாயகம், 30, நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த, கல்லுாரி மாணவர்கள், சிறுவன் என, 3 பேர் பிரம்மநாயகத்தை தாக்கி, அவரிடம் இருந்து அலைபேசியை பறித்து உடைத்தனர்.

பிரம்மநாயகம் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரித்ததில், புதுச்சேரியை சேர்ந்த, 15 வயது சிறுமிக்கு, பிரம்மநாயகம், சுரேஷ் என்ற பெயரில் பழக்கமாகி, இன்ஸ்டாகிராம் மூலம் பேசி வந்ததும், அதன்மூலம் சிறுமி புகைப்படத்தை பெற்ற அவர், அந்த படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து அனுப்பியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த சிறுமி, சேலத்தை சேர்ந்த, கல்லுாரி மாணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால்தான், பிரம்மநாயகத்திடம் அலைபேசியை பறித்து உடைத்ததாக, போலீசாரிடம், 3 பேரும் வாக்குமூலம் அளித்தனர். பின் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

அதேநேரம் சிறுமியை சீண்டிய பிரம்மநாயகத்தை பிடிக்க, 26ல் தனிப்படை போலீசார், நெல்லை சென்றனர். அங்கிருந்த பிரம்மநாயகத்தை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், நேற்று முன்தினம் சேலம் அழைத்து வந்து விசாரித்ததில், இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தது தெரிந்தது. இதனால் நேற்று, பிரம்மநாயகத்தை, போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us