ADDED : நவ 23, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் அரசு மருத்துவமனை அருகில், ரயில் மோதி வாலிபர் பலியானார்.
சேலம் அரசு மருத்துவமனை பின்பகுதியில் உள்ள தேவாங்கபுரம், புதுத்தெருவை சேர்ந்தவர் மாது மகன் மணிகண்டன், 19; கூலி தொழிலாளி.
இவர் நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அப்பகுதியில் தேடிய போது, சேலம்-விருதாசலம் ரயில் தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில், மணிகண்டன் இறந்து கிடந்தார். இதுகுறித்து சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. எஸ்.ஐ., கோதண்டபாணி தலைமையிலான போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர். தண்டவாளத்தை கடக்கும் போது, ரயில் மோதி உயிரிழந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

