நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு: ஏற்காடு, ஒண்டிக்கடை ரவுண்டானா அருகே தனியார் தங்கும் விடுதியில் உணவகம் உள்ளது. அங்கு பணிபுரிய, நேபாள நாட்டை சேர்ந்த, பிஷ்ணு குமால், 33, அவரது அண்ணன் மகன் பக்தா பகதுார்குமால், 28, ஆகியோர் நேற்று முன்தினம் வந்தனர். அன்று பகலில் பணிபுரிந்துவிட்டு, இரவு, 11:30 மணிக்கு துாங்கச்சென்றனர்.
ஆனால் காலை வெகுநேரமாகியும் பிஷ்ணுகுமால் எழவில்லை. விடுதி நிர்வாகி, அவரை ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

