sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் இளைஞர்கள்

/

பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் இளைஞர்கள்

பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் இளைஞர்கள்

பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் இளைஞர்கள்


ADDED : டிச 23, 2024 10:21 AM

Google News

ADDED : டிச 23, 2024 10:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி ஒன்றியம், அ.புதுார் அரசு மாதிரி பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அப்பள்ளிகளுக்கு செல்லும் மாணவியருக்கு இளைஞர்கள் பல்வேறு வித தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, பா.ம.க.,வின் சேலம் தெற்கு மாவட்ட ஊடக பிரிவு தலைவர் மோகன் கூறியதாவது: இளைஞர்கள், மாணவியர் பள்ளிக்கு வரும் சாலையில், விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வருகின்றனர். அப்போது, 'வீலிங்' செய்து சாகசத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் அரசு மாதிரி பள்ளிக்கு பல மாணவர்கள் விதிமீறி இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். அதுவும், 3, 4 பேர் அமர்ந்து வேகமாக செல்வதால் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.

வெளியூரை சேர்ந்த இளைஞர்கள் கும்பலாக காலை, மாலையில், பள்ளிக்கு பைக்கில் வந்து மாணவியரிடம் கேலி, கிண்டல் செய்கின்றனர். மேலும் டீக்கடைகள் முன் நின்று கொண்டு, மொபைல் போனில், 'செல்பி' எடுக்கின்றனர். அவர்களை கண்டித்தால் கும்பலாக சேர்ந்து மிரட்டுகின்றனர். போலீசாரிடம் புகாரளித்தால் இரு நாட்கள் ரோந்து வருகின்றனர். பின் கண்டு கொள்வதில்லை. அதனால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us