ADDED : ஏப் 28, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள கொரட்டி சிந்தாமணி அம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.
இதில் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளை வீரர்கள் ஆர்வத்துடன் பிடித்தனர். முன்பதிவு செய்யாத மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறுவர்களை போலீசார் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.
மேலும் நுாற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கண்மாய் மற்றும் வயல்வெளிகளில் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன.
காளை முட்டியதில் 11 பேர் காயம் அடைந்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

