sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புவனத்தில் அரசு அதிகாரிகளின்றி மக்கள் தவிப்பு: வெளியூர்களுக்கு செல்வதால் நிர்வாகம் பாதிப்பு

/

திருப்புவனத்தில் அரசு அதிகாரிகளின்றி மக்கள் தவிப்பு: வெளியூர்களுக்கு செல்வதால் நிர்வாகம் பாதிப்பு

திருப்புவனத்தில் அரசு அதிகாரிகளின்றி மக்கள் தவிப்பு: வெளியூர்களுக்கு செல்வதால் நிர்வாகம் பாதிப்பு

திருப்புவனத்தில் அரசு அதிகாரிகளின்றி மக்கள் தவிப்பு: வெளியூர்களுக்கு செல்வதால் நிர்வாகம் பாதிப்பு


ADDED : ஆக 16, 2024 04:06 AM

Google News

ADDED : ஆக 16, 2024 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனம் தாலுகாவின் முக்கிய அதிகாரிகள் பலரும் வெளியூரில் இருந்து தினசரி வந்து செல்வதால், சான்றுகள் உள்ளிட்ட அரசின் ஆவணங்களை பெற முடியாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தின் கடை கோடியில் திருப்புவனம் உள்ளது. திருப்புவனத்தில் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 173 கிராம மக்கள் அவசரத்திற்கு மனு கொடுப்பதாக இருந்தால் 30 கி.மீ., துாரமுள்ள மானாமதுரைக்கு செல்ல வேண்டும். இதனால் நிர்வாகம் பாதிப்பதாக கூறி 2013ல் திருப்புவனம் தனி தாலுகாவாக உருவானது. திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளையும் சேர்த்து ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர். திருப்புவனம் தாலுகா, பேரூராட்சி, பொதுப்பணித்துறை உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் வெளியூர்களில் இருந்து வருகின்றனர். இதனால் நகரில் முக்கியமான பிரச்னைகளில் முடிவு எடுக்க முடியாமல் கீழ்மட்ட அதிகாரிகள் திணறுகின்றனர். உயர் அதிகாரிகள் வெளியூரில் இருப்பதால் அலைபேசியில் மட்டும் நிலவரத்தை கேட்டு முடிவு எடுக்க முடியவில்லை. கடந்த ஒரு வாரமாக மழை காரணமாக மின்சாரம் இரவு 12 :00மணி வரை துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். உயர் அதிகாரிகள் இல்லாததால் சரி செய்யவே முடியவில்லை. இதுபோல குடிநீர் தட்டுப்பாடு, வரத்து கால்வாய் சேதம், கண்மாய்களில் மணல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் தீர்வு எடுக்க முடியாமல் கீழ்மட்ட அதிகாரிகள் தவித்து வருகின்றனர். பொதுப்பணி, வருவாய், மின்வாரியம், போலீஸ் துறை அதிகாரிகள் தலைமையிடத்தில் தங்குவதே இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. அலுவலக பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட அரசு வாகனத்தையும் ஒருசில அதிகாரிகள் அனுமதி பெறாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் எடுத்து செல்கின்றனர். ஏற்கனவே மடப்புரம் கோயில் செயல் அலுவலர் சொந்த ஊருக்கு அரசு வாகனத்தில் சென்ற போது அபிராமம் அருகே விபத்து ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் தாலுகா தலைமையிடத்தில் உரிய அதிகாரிகள் தங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

///






      Dinamalar
      Follow us