sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரூ.24 லட்சம் பறிமுதல்

/

ரூ.24 லட்சம் பறிமுதல்

ரூ.24 லட்சம் பறிமுதல்

ரூ.24 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 28, 2024 05:39 AM

Google News

ADDED : மார் 28, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: லோக்சபா தேர்தலையொட்டி நடத்தப்பட்ட வாகன சோதனையில் சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை ரூ.24லட்சத்து 47ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாகனங்கள் மூலமாக எடுத்துச்செல்லப்பட்டு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 10 செக் போஸ்ட்களில் வாகன பரிசோதனை நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை(தனி) ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பல்வேறு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை சிவன்கோவில் அருகே ஏ.டி.எம்., மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.13லட்சம், சிவகங்கை அருகே சிலந்தகுடி, சக்கந்தி விலக்கு மற்றும் மானாமதுரை, திருப்புவனம் பகுதி உள்பட மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.24 லட்சத்து 47ஆயிரத்து 900 பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சொந்த தேவைகளுக்காக பணம் கொண்டு செல்பவர்கள் ரூ.50ஆயிரத்திற்கு அதிகமாக கொண்டு சென்றால் ஆவணங்கள் வேண்டும் அல்லது அதற்கு கீழ் உள்ள தொகையை மட்டுமே எடுத்துச்செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருந்தால் பாதிப்பு இருக்காது தேர்தல் நெருங்கும் வேளையில் வாகன சோதனை இன்னும் தீவிரப்படுத்தப்படும். ஆகையால் பொதுமக்கள் வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்திற்கு உரிய ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும்.






      Dinamalar
      Follow us