/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை இழுபறி 2700 பேர் காத்திருப்பு
/
ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை இழுபறி 2700 பேர் காத்திருப்பு
ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை இழுபறி 2700 பேர் காத்திருப்பு
ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை இழுபறி 2700 பேர் காத்திருப்பு
ADDED : பிப் 25, 2025 06:53 AM
சிவகங்கை: சிவகங்கையில் குழந்தைகள் நல திட்டம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான நிதி உதவித்தொகை கிடைப்பதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.
மாவட்டத்தில் தாய், தந்தையை இழந்த 18 வயதிற்கு உட்பட்டவர்கள்கல்வி பெறும் நோக்கில்,மாதத்திற்கு ரூ.4000 வீதம் 3 ஆண்டுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. இதற்காக தாய், தந்தையை இழந்த குழந்தைகள், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தையின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருத்தல் வேண்டும்.
உரிய சான்றுடன் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்தால், பதிவு மூப்புபடி அரசு தொடர்ந்து 3 ஆண்டுக்கு கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது. சிவகங்கையில் இந்த உதவித்தொகை கேட்டு 2700 குழந்தைகள்வரை விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். ஆனால் இவர்களுக்கான உதவித்தொகை கிடைப்பதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது.
ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்கி வருகிறது. ஏற்கனவே விண்ணப்பித்து கல்வி உதவித்தொகை பெற்று வருபவர்களுக்கு மட்டுமே மீண்டும் உதவி தொகையை அரசு விடுவித்து வருகிறது. அதே நேரம் புதிதாக விண்ணப்பித்த குழந்தைகளுக்கு இது வரை கல்வி உதவித்தொகை வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
மாவட்ட குழந்தைகள்நல அலுவலர் துரை கூறியதாவது:
இது வரை 177 குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை பெற்று தருகிறோம். புதிதாக விண்ணப்பித்து 2700 பேர் வரை காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அவர்களுக்கான பணம் விடுவிக்கப்பட்ட உடன், சீனியாரிட்டி அடிப்படையில் கல்வி உதவி தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும், என்றார்.