/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வி.ஏ.ஓ.,விற்கு '3 ஆண்டு'
/
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வி.ஏ.ஓ.,விற்கு '3 ஆண்டு'
ADDED : மார் 01, 2025 02:58 AM
சிவகங்கை: லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,விற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே காரையூரைச் சேர்ந்தவர் பாக்கியம். இவர், சாவித்ரி என்பவரிடம், 3 சென்ட் நிலம் வாங்கினார்.
நிலத்தை தன் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய 2013 நவம்பரில் வி.ஏ.ஓ., ராஜா, 50, என்பவரிடம் பாக்கியம் விண்ணப்பித்தார்.
அவர் பட்டா மாறுதல் செய்ய, 5,000 ரூபாய் கேட்டார். பாக்கியம், சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார், ராஜாவை கைது செய்தனர்.
இவ்வழக்கு சிவகங்கை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. ராஜாவிற்கு, மூன்று ஆண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி செந்தில்முரளி தீர்ப்பு அளித்தார்.