/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை கோயிலில் 508 திருவிளக்கு பூஜை
/
மானாமதுரை கோயிலில் 508 திருவிளக்கு பூஜை
ADDED : மார் 08, 2025 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் உலக நன்மைக்காக 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
நேற்று மாலை 6:00 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் சர்வ அலங்காரங்களுடன் கோயில் முன் மண்டபத்தில் எழுந்தருளினார்.
மானாமதுரை மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் விளக்குகளை ஏற்றி வைத்து அம்மனை வழிபட்டனர்.
ஏற்பாடுகளை கோயில் மகளிர் உழவார பணியாளர்கள், தேவஸ்தான கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் அர்ச்சகர்கள் ராஜேஷ், குமார், சுந்தரராஜ், பரத்வாஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.