ADDED : மார் 09, 2025 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டையில் நேற்று காலை 9:00 மணி அளவில் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தினசரி காய்கறி மார்க்கெட், அதன் சுற்று பகுதியில் ஒரு வெறிநாய் சுற்றித்திரிந்தது.
மார்க்கெட்டிற்கு வந்தவர்கள், ரோட்டில் வாகனங்களில் சென்றவர்களை கூட விடாமல் விரட்டிகடித்தது. அ.திமு.க. கவுன்சிலர் முத்தழகு 55, வினோத்குமார் 43, நிகேதன் 23, பகுருதீன் 60, அர்ஜூனன் 55, அன்பரசன் 52, வீரசேகரன் 43, மற்றும் விஜயா உட்பட எட்டு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.