sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வாகனங்களில் '‛ஸ்டிக்கர்' அகற்றும் திட்டம் சிவகங்கையில் விரைவில் அமலாகிறது

/

வாகனங்களில் '‛ஸ்டிக்கர்' அகற்றும் திட்டம் சிவகங்கையில் விரைவில் அமலாகிறது

வாகனங்களில் '‛ஸ்டிக்கர்' அகற்றும் திட்டம் சிவகங்கையில் விரைவில் அமலாகிறது

வாகனங்களில் '‛ஸ்டிக்கர்' அகற்றும் திட்டம் சிவகங்கையில் விரைவில் அமலாகிறது


ADDED : மே 04, 2024 05:18 AM

Google News

ADDED : மே 04, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; வாகனங்களில் போலீஸ், வழக்கறிஞர், பிரஸ் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்ட சென்னை போலீஸ் தடை விதித்தது போன்றே சிவகங்கை மாவட்ட போலீஸ், வட்டார போக்குவரத்து அலுவலர் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

சென்னை போலீஸ் கமிஷனர், அங்கு இயங்கும் அனைத்து வாகனங்களிலும் மோட்டார் வாகன விதிகளை மீறி போலீஸ், வழக்கறிஞர், பிரஸ், டாக்டர் போன்று பதவிகளை குறிப்பதற்கான ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வாகன நம்பர் பிளேட்டில் கண்டிப்பாக இது போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என்பதை கடுமையாக பின்பற்றி வருகின்றனர்.

மே 1 வரை அவரவர் வாகனங்களில் உள்ள ஸ்டிக்கர்களை அகற்றி கொள்ள வேண்டும்.

மே 2 முதல் ஸ்டிக்கர்களை அகற்றாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, சென்னை போலீசார் அவ்வபோது வாகனங்களை நிறுத்தி விதிமீறி ஒட்டிய ஸ்டிக்கர்களை அகற்றி வருகின்றனர்.

இந்த திட்டத்திற்கு சென்னையில் நல்ல வரவேற்பு தந்துள்ளது. இதன் மூலம் தேவையின்றி குற்றவாளிகள் தப்பிப்பது தவிர்க்கப்படும் என போலீசார் உணர்கின்றனர்.

ஸ்டிக்கர்' அகற்றும் திட்டம் அமல்


சென்னையை போன்று சிவகங்கையிலும் மோட்டார் வாகன விதியை மீறி வாகனங்களில் போலீஸ், வழக்கறிஞர், டாக்டர், பிரஸ் போன்ற ஸ்டிக்கர்களை குறிப்பாக வாகன நம்பர் பிளேட்டில் ஒட்டுவதை தடுக்கும் இத்திட்டத்தை சிவகங்கை மாவட்ட போலீஸ், வட்டார போக்குவரத்து அலுவலர், ஆய்வாளர்கள் அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

போலீஸ் நடவடிக்கைக்கு பரிந்துரை


சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் கூறியதாவது: பொதுவாக வாகன உற்பத்தியின் போது எப்படி வருகிறேதா அப்படியே தான் வாகனங்களை இயக்க வேண்டும்.

அதற்கு மேல் போலீஸ், வழக்கறிஞர், டாக்டர், பிரஸ் ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது.

குறிப்பாக மோட்டார் வாகன சட்டம் 50 மற்றும் 51ன்படி நம்பர் பிளேட்டில் கண்டிப்பாக எழுதக்கூடாது. இந்த நடைமுறையை பின்பற்ற போலீசுக்கு அந்தந்த ஐ.ஜி., மூலம் அறிவுறுத்தியுள்ளனர். நாங்களும் நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறார்.






      Dinamalar
      Follow us